உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, November 19, 2018

ஸ்ரீமுஷ்ணத்தில் அதிமுகவின் 47-வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம்


ஸ்ரீமுஷ்ணத்தில் அதிமுகவின் 47&து ஆண்டுவிழா பொதுக்கூட்டம்.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அதிமுகவின் 47வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம் ஸ்ரீமுஷ்ணம் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார்.ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழக செயலாளர் பூமாலை சண்முகம்,எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஈகேபி மணிக்கண்டன்,முன்னாள் ஒன்றியகுழு தலைவர் எம்கே மணிக்கண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட துணைகழக செயலாளரும், காட்டமன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினருமான நாக முருகுமாறன் வருகை தந்தார்.பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எத்தனை இடர் வந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் வழியில் மக்கள் பணி செய்து வரும் தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் நமது இருகண்களாக இருந்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார்கள்.கட்சியின் அனைத்து தொண்டர்களும் கட்டுக்கோப்பாக ஒற்றுமையோடு இருந்து வரும் நிலையில் வருகின்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப்பெற்று யாராலும் அசைக்கமுடியாத சக்தி மிகுந்த கட்சி என்றும் எம்எல்ஏ முருகுமாறன் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மேலும் ஜெயலலிதாபேரவை ராயர் திருமுருகன்,இளஞரணி மகா அறிவழகன்,மகளிரணி சிதம்பரம் கமலா, மாவட்ட அண்ணணா தொழிற்சங்க  துணை தலைவர் வெங்கடேசன்,உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.முடிவில் ஒன்றிய பொருளாளர் கொளஞ்சி நன்றி கூறினார்.