உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, March 27, 2022

புவனகிரியில் சமூகநலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரையில் உட்கார வைக்கப்பட்ட பயனாளிகள் வேதனையளிப்பதாக பலரும் தெரிவிப்பு



கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழக அரசுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் 831 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதற்காக புவனகிரி,கீரப்பாளையம்,பரங்கிப்பேட்டை,கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பயனாளிகள் மற்றும் அவர்களுடன் வருகை தந்தவர்கள் என ஆயிரத்திற்குமேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகள் பலருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்பகுதியில் வரிசையாக சேர்களில் அமரவைக்கப்பட்டனர்.மற்றவர்கள் சுமார் நூறுக்குமேற்பட்டவர்கள் மண்டபத்தின் வெளிப்பகுரி வராண்டாவில் பல மணிநேரத்திற்கு மேலாக தரையில் அமரவைக்கப்பட்டனர்.இன்னும் சிலர் மண்டபத்தின் மாடிப்படிகளிலும் அமர வைக்கப்ப்ட்டனர்.இதனால் இதனைக்கண்ட பலரும் வேதனையடைந்தனர்.தரையிலும், மாடிப்படியிலும் அமரவைக்கப்பட்ட பயனாளிகளுக்கு அமருவதற்கு தகுந்த ஏற்பாபடுகளை செய்திருந்தால் நன்றாக இருக்குமே என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment