உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, November 17, 2018

புடையூர் ஊராட்சியில் சிறப்பான கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடு

தமிழகத்தில் கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்குமிடையே கரையை கடக்கும் என்ற வானிலை அறிவிப்பையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தன.மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு 
உணவும்,மருந்துகளும் வழங்கப்பட்டது.அதுபோல் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் ஊராட்சியில் வீராணம் ஏரிக்கரையோர கிராமமாக இருப்பதால்
கஜா புயல்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு கீரப்பாளையம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) திருமதி.ரேவதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி.விஜயா ஆகியோர்  உணவு மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார்கள். 
இதில் துனை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சந்தோஷ் ,ஒன்றிய  பொறியாளர் திருமதி.சிவசங்கரி, மற்றும் ஒன்றிய  மேற்பார்வையாளர் திரு.விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர் 
 மேலும் இதில் கிராம நிர்வாக அலுவலர் திரு.பாரதிதாசன்,
கிராம உதவியாளர் திரு.சிதம்பரம்,ஆகியோரும் உடனிருந்தனர்...
முகாம் அமைப்புக்கான. ஏற்பாடுகளை புடையூர் ஊராட்சி செயலர் ஐய்யப்பன் செய்திருந்தனர்.