உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, December 14, 2018

சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு ஊராட்சியில் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு ஊராட்சியில் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு ஊராட்சி அமைந்துள்ளது.இந்த ஊராட்சியில் உள்ள குறிஞ்சிக்குடி கிராமத்தில் தற்போது சாலை அமைக்கும்பணி நடந்து வருகிறது.ஊராட்சி ஒன்றிய சிறப்புத்திட்டத்தில் சாலையானது மூன்று மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கவேண்டியதற்கு சாலைபோடுபவர்கள் ஒன்றரைமீட்டர் அகலத்தில் சாலை அமைத்ததால் குறிஞ்சிக்குடி கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதனால் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அவர்கள் தெரிவிக்கும்போது இக்கிராமத்தில் கிராமசாலையானது பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதனை அதிகாரிகள் மீட்டெடுக்காமல் சாலைஅமைக்கிறார்கள்.இவ்வாறு சாலை அமைப்பதால் இந்த சாலையானது நாளடைவில் சேதமடைந்து இப்பகுதி மீண்டும் பழையநிலையிலேயே தொடரும்.மேலும் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிய வழியில்லாத நிலை நீண்டநாட்களாகவே இருந்து வருகிறது.இதனையும் சரிசெய்து சாலை அமைத்து தரவேண்டும்.அதிகாரிகள் விரைந்து இப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து தரமான சாலை அமைக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.